வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் எட்டு குழந்தைகளைக் கொன்றதுடன், மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
லிவர்பூலுக்கு தெற்கே உள்ள செஸ்டர் மருத்துவமனையில் 2015 மற்றும் 2016 காலப்பகுதியில் குழந்தைகள் பிறந்தவுடன் அடுத்தடுத்து இறந்தது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து 30 வயதான லூசி லெட்பி மீது குற்றம் சாட்டப்பட்டதாக செஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரையிலான காலப்பகுதியில் 8 குழந்தைகளைக் கொன்றதுடன், மேலும் 10 குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் இறப்புகள் தொடர்பாக மூன்றாவது முறையாக லெட்பி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் முன்னர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவருகிறார்.
தற்போது காவலில் உள்ள லெட்பி என்ற அந்தத் தாதி இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து